கடலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் தலைமையில் 2 தீர்மானங்கள்
கடலூர் நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடைபெறவில்லை.


கடலூர் நகர்மன்றக் கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக நடைபெறவில்லை.
இந்த நிலையில், கடலூர் நகர்மன்றத் துணைத் தலைவர் குமார் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த 30 கவுன்சிலர்கள் இன்று கடலூர் ஹோட்டல் ஒன்றில் கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதாவது, கடலூரில் தனியாருக்கு சொந்தமான சி.கே. பொறியியல் கல்லூரி வளாகத்துக்குள், பொது இடம் உள்ளது. அந்த இடத்தை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, கடலூர் பேருந்து நிறுத்தத்தில் உள்ள 3 கடைகளை வேறொருவரது பெயருக்கு மாற்றம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் கடலூர் நகர்மன்றத்துக்கு பல லட்சம் இழப்பு ஏற்படும் என்றும், இந்த முடிவுகளை, கடலூர் நகர்மன்றத் தலைவர் சுப்ரமணியன் தன்னிச்சையாக எடுத்திருப்பதாகவும் கூறி, அதனை எதிர்த்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...