சேலத்தில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம்
சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.


சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உட்பட 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியருக்கு மிரட்டல் கடிதம் வந்தது.
நேற்று இரவு மாவட்ட ஆட்சியர் மகரபூஷணத்துக்கு வந்த ஒரு கடிதத்தில், சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலவலகம், மாநகர காவல்துறை ஆணையர் அலுவகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை ஆகிய 4 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் இப்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து இது புரளி என்று கூறிய போலீஸார், வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...