ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

ஆட்டோவில் வீடு திரும்பும் போது விபத்து: 1-ம் வகுப்பு சிறுமி சாவு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 1-ம் வகுப்பு சிறுமி வியாழக்கிழமை விபத்தில் உயிரிழந்தார்.

News image
Updated On :20 டிசம்பர் 2012, 1:50 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 1-ம் வகுப்பு சிறுமி வியாழக்கிழமை விபத்தில் உயிரிழந்தார்.

சேதுநாராயணபுரம், யாதவர் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் வர்ஷினி (7). இவர் கூமாப்பட்டி வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.வியாழக்கிழமை மாலை பள்ளி முடிந்து ஆட்டோவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

கதிரேஸ் தியேட்டர் அருகே ஆட்டோ வந்து கொணடிருந்துள்ளது. அப்போது சிறுமி வர்ஷினி ஆட்டோவிலிருந்து வெளியே எட்டி பார்த்துள்ளார். அப்போது எதிரே வந்த லோடு வேன், ஆட்டோவை ஒட்டிச் சென்றுள்ளது. இதில் சிறுமி வர்ஷினியின் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து வத்திராயிருப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.