ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மேற்குத் தொடர்ச்சி மலையில் அபூர்வ வகை பறவைகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஸ்ரீலங்கன் தவளை வாய் பறவை...

News image
Updated On :25 டிசம்பர் 2012, 4:25 pm

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் 10 முதல் 12 வகையான அபூர்வ வகை பறவைகள் உள்ளது தெரியவந்ததுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சாம்பல் நிற அணில் சரணாலயப் பகுதியில் முதல் முறையாக பறவைகள் குறித்த தகவல்கள் சேகரிக்கும் பணி சனிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை நடைபெற்றது.

செவ்வாய்கிழமை தகவல்கள் சேகரித்து வந்த பின்னர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், பெங்களூரில் உள்ள வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வரும் பறவைகள் ஆர்வலர் சந்திரசேகரன் தினமணி செய்தியாளரிடம் கூறியதாவது:

மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மட்டுமே உரித்தான, காண்பதற்கு அரிதான, அபூர்வ வகையான 10 முதல் 12 வகையான பறவை இனங்கள் இப்பகுயில் இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக கேரளா மாநிலத்தில் மட்டுமே உள்ளது என்று கருதப்படும் ஸ்ரீலங்கன் தவளை வாய் பறவை முதலியார் ஊத்து, சாமியார் தடத்தில் இருந்துள்ளது. இதனை தகவல் சேகரிக்கச் சென்ற குழுவினர் புகைப்படம் எடுத்து வந்துள்ளனர். இதனைப் பார்க்கும்போது இவ்வளவு தொந்தரவுகளுக்கு நடுவேயும் மலைகள் சிறப்பாக உள்ளது என்பதே உண்மை. தற்போது திரட்டப்பட்ட தகவல்கள் ஒருங்கிணைக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்படும். தற்போது மேற்குத் தொடர்ச்சி மலையில் இப் பகுயில் உள்ள பறவைகளை சிறப்பாக பராமரிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய பரிந்துரைகள் வனத்துறைக்கு அளிக்கப்படும். மேலும் பறவை இனங்களைப் பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.