ஸ்ரீவிலி.யில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இளைஞர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார்.


ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், பெருமாள்பட்டி தெருவைச் சேர்ந்தவர் கருத்தக்காளை நாடார் மகன் காளிராஜ் (37). இவர் ஆராய்ச்சிபட்டி நாடார் உறவின் முறைக்குச் சொந்தமான இடத்தில் டீ கடை நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி, மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உண்டு. இன்று பொட்டல்பட்டியில் உள்ள தனது சகோதரியை பார்க்க காளிராஜ் இரு சக்கர வாகனத்தில் ராஜபாளையம்-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். மடவார்வளாகத்தை அடுத்து சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம், காளிராஜ் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், காளிராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...