ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை : தந்தை புகார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார்.

News image
Updated On :27 டிசம்பர் 2012, 12:09 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாலிடெக்னிக் சென்ற மாணவியை காணவில்லை என அவரது தந்தை காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் செய்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கொத்தன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ச.கிருஷ்ணமூர்த்தி (42). இவரது மகள் யோகசற்குரு லட்சுமி (16), ஸ்ரீவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் எம்.பி.கே.புதுப்பட்டி அருகேயுள்ள மஞ்சம்மாள் பாலிடெக்னிக்கில் முதலாண்டு டி.இ.சி.இ. படித்து வந்தார். தினமும் காலை ஊரிலிருந்து பஸ்ஸில் பாலிடெக்னிக் சென்றுவிட்டு மாலை வீடு திரும்புவாராம். திங்கள்கிழமை காலை பாலிடெக்னிக் சென்றவர் இதுவரை வீடு திரும்பவில்லையாம். இது குறித்து வியாழக்கிழமை வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் கிருஷ்ணமூர்த்தி புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.