ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

பிரதமர் உருவ பொம்மை எரிக்க முயன்ற 3 அ.தி.மு.க.வினர் கைது

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம்,

News image
Updated On :31 டிசம்பர் 2012, 1:07 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, கிருஷ்ணன்கோவிலில் இன்று  பிரதமர் மன்மோகன்சிங்கின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற மூன்று அ.தி.மு.க.வினரை போலீஸார் கைது செய்தனர்.

புதுதில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிமன்ற கூட்டத்தில், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவமரியாதை செய்யப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து எஸ்.ராமச்சந்திராபுரம், ஜெ.ஜெ.நகர் அ.தி.மு.க. கிளைச் செயலாளர் ராமராஜ், வன்னியம்பட்டி வழக்குரைஞர் பாலதண்டாயுதம், சுந்தரபாண்டியம் ராமர் ஆகியோர் திங்கள்கிழமை இரவு கிருஷ்ணன்கோவில் பஸ் நிறுத்தத்தில் பிரதமர் உருவ பொம்மையை எரிக்க முயன்றனர். உருவ பொம்மைக்கு தீ வைத்த உடன் போலீஸார் விரைந்து வந்து தீயை அணைத்து, மூவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனால் இப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.