ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி சிறுவன் சாவு: மூவர் காயம்

அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

News image
Updated On :31 டிசம்பர் 2012, 3:20 am

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் 10 வயது சிறுவன் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் மூவர் காயம் அடைந்தனர்.சிவகாசி அருகேயுள்ள விளாம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் (37). இவர் இங்கு மளிகைக் கடை வைத்துள்ளார். இவர் தனது மனைவி தாமரைச்செல்வி (32), மகன் தங்க விக்ரம் (10), மகள் விஜய அபிநயா (7) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்து கொண்டிருந்தார். சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் பூவநாதபுரம் விலக்கு அருகே வந்து கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம். இதில் தங்க விக்ரம் உயிரிழந்தார். மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த முருகன் மற்றும் அதில் வந்த தாமரைச்செல்வி, விஜய அபிநயா ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். மல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.