காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

வேடசந்தூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி: 2 பேர் கைது

திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது. அதிகாலை சுமார்

Updated On :19 செப்டம்பர் 2012, 5:13 pm

திண்டுக்கல், ஜூலை 8: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் இன்று அதிகாலை கொள்ளை முயற்சி நடந்தது.

அதிகாலை சுமார் 1.30 மணி அளவில் ஒரு காரில் வந்த 3 பேர், வெல்டிங் மிஷின் கொண்டு, வங்கியின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, உள்ளே புக முயன்றனர். அப்போது, அங்கே திரண்ட பொதுமக்கள், கொள்ளையர்களைப் பிடித்து வைத்துக் கொண்டு போலீஸாருக்கு தகவல் தந்தனர்.

இதை அடுத்து, அவர்களிடம் திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவர் பிடிபட்டனர். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். போலீஸார் வழக்கு பதிந்து, தப்பியோடியவரைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.