மதுரை அருகே ஆம்புலன்ஸ்-லாரி மோதல்: ஒருவர் பலி
மதுரை, ஜூலை 19: மதுரை அருகே திருச்சி சாலையில் ஆம்புலன்ஸுடன் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். மதுரை அரசு பொதுமருத்துவமனையில் இருந்து கொட்டாம்பட்டிக்கு ஒரு பிரசவ கேஸ் தொடர்பாக சென்ற ஆம்புலன்ஸ், சி


மதுரை, ஜூலை 19: மதுரை அருகே திருச்சி சாலையில் ஆம்புலன்ஸுடன் லாரி மோதிய விபத்தில் ஒருவர் பலியானார்.
மதுரை அரசு பொதுமருத்துவமனையில் இருந்து கொட்டாம்பட்டிக்கு ஒரு பிரசவ கேஸ் தொடர்பாக சென்ற ஆம்புலன்ஸ், சிகிச்சை பெற்றவரை இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆம்புலன்ஸ் கருங்காலக்குடி அருகே 4 வழிச்சாலையில் வந்தபோது, லாரி ஒன்று குறுக்கே பாய்ந்ததில் பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், ஆம்புலன்ஸில் இருந்த மிடி டெக்னீஷியன் சரவணன் (34) சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...