திண்டுக்கல், ஜூன் 4: திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
திண்டுக்கல்லை அடுத்த பூம்பூர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்குப் பின்னர் அவர் திண்டுக்கல் - நிலக்கோட்டைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகத் தெரியவருகிறது.
முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் திமுகவின் பி.சி.முரளிதரனிடம் போலீஸார் பூம்பூர் காவல் நிலையத்தில் விசாரணை நடத்தி அவரை நிலக்கோட்டை ஜே.எம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி அனுராதா உத்தரவின் பேரில் அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில், திண்டுக்கல் ஐ.பெரியசாமியிடம் விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இருப்பினும் பெரியசாமியிடம் எது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்ற தகவலை போலீஸார் தெரிவிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புற்றுநோய் பாதித்த நிலையிலும் மமதாவுக்கு வாக்கு கேட்கும் நடிகை!

நூறு சாமி டீசர்!

பாஜக ஆட்சிக்கு வந்தால் வங்கமொழியை அழித்துவிடும்: மமதா எச்சரிக்கை
இரண்டாம் தர குடிமக்களா நாங்கள்? - ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் தலைவர்!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

