திண்டுக்கல், ஜூன் 4: பத்தாம் வகுப்புத் தேர்வில் தவறிவிட்டதாக வந்த தவறான தகவலால் மன உளைச்சல் அடைந்த மாணவி, தீயிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் கோவிந்தாபுரத்தைச் சேர்ந்த நாராயணன் - முருகம்மாள் தம்பதியின் மகள் காயத்ரி. திண்டுக்கல் அரசுப் பள்ளியில் படித்து வந்த இவர், 10ம் வகுப்புத் தேர்வு எழுதி முடிவுக்காகக் காத்திருந்தார். இன்று முடிவுகள் வெளியானதும், அவர் கணிதத்தில் 16 மதிப்பெண்கள் பெற்று தோல்வியைத் தழுவியதாக வந்த தகவலால் மன உளைச்சல் அடைந்து, மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அதே நேரம், அவரது தாயார் இண்டர்நெட் மையத்துக்குச் சென்று அவரது மதிப்பெண்களைக் குறித்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினார். அப்போது வீட்டில் இருந்து புகையாக வரவே, அதிர்ச்சி அடைந்து வீட்டைத் திறந்து பார்த்தார். அப்போது மகள் தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. இதனைக் கண்டு அவர் கதறி அழுதார்.
அந்தப் பெண், 49,45,37,56,43 என மொத்தம் 230 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இடையில் வந்த தவறான தகவலால் அவர் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”விஜய் மனதில் பாஜக இருக்கிறது!” குஷ்பு பேட்டி

கான் சிட்டி: முக்கிய கதாபாத்திரங்கள் அறிமுகம்!

கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு!: ஆயில் இந்தியா
காங்கிரஸ் செய்த 5 பாவங்கள்: அஸ்ஸாம் பிரசாரத்தில் பட்டியலிட்ட மத்திய அமைச்சர்!
வீடியோக்கள்

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

