ராமநாதபுரம், ஜூன்.10: கரூர் மாவட்டம் ஒன்றுபுரத்தைச் சேர்ந்த தனசேகரன்(38), மோகன்ராஜ்(33) ஆகியோர் தங்களது தந்தை இறந்து ஒரு வருடம் ஆனதால் அவருக்கு திதி கொடுப்பதற்காக ராமேஸ்வரத்துக்கு காரில் குடும்பத்துடன் வந்தனர். திதி கொடுத்துவிட்டு திரும்பிச் செல்லும்போது தெளிச்சாத்த நல்லூர் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென மரத்தின் மீது மோதியது. இதில் தனசேகரின் மனைவி பரிமளா(35), மோகன்ராஜின் மனைவி பாக்கியலட்சுமி(30), அவர்களின் தாயார் ராணி(60), உறவினர் நவாப் என்ற நாராயணன்(15) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் தனசேகர், மோகன்ராஜ், குழந்தைகள் சுபி(18), ரியா(2), கார் டிரைவர் சந்தோஷ்(38) ஆகியோர் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து பரமக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் கஞ்சாவை ஒழிப்போம்: இபிஎஸ்
ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

பாஜக ஆட்சி அமைத்த 6 மாதங்களுக்குள் கோர்க்கா பிரச்னைக்குத் தீர்வு: அமித் ஷா

பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

