காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

ஜெர்மனி குருத்வாராவில் சீக்கியர்கள் மோதல்; 11 பேர் காயம்!

ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

மோதலில் ஈடுபட்ட சீக்கியர்கள் - X

Published On :

ஜெர்மனியில் உள்ள குருத்வாராவில் சீக்கியர்களிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் காயமடைந்ததாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜெர்மனியில் உள்ள மோயர்ஸ் நகரில் சீக்கியர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாரா அமைந்துள்ளது. அங்கு ஞாயிறன்று ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்துள்ளனர்.

குருத்வாராவின் நிதி மற்றும் நிர்வாக தொடர்பான பிரச்னையில் சீக்கியர்களின் இரு பிரிவினருக்குள் மோதல் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுபற்றி ஜெர்மன் செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்திகளில், குருத்வாராவில் நீண்ட நாள்களாக முன்னாள் கமிட்டி நிர்வாகிகளுக்கும் தற்போதுள்ள நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துள்ளது பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

சீக்கியர்களுக்குச் சொந்தமான நிதி கையாடல் தொடர்பாகவும் அவர்களுக்குள் பிரச்னை எழுந்த நிலையில் குருத்வாரா மீதான கட்டுபாடு மற்றும் செல்வாக்கு முக்கியப் பிரச்னையாகக் இருந்துள்ளது.

இதன் காரணமாக சீக்கியர்கள் 40-க்கும் மேற்பட்டோர் இரு பிரிவாகப் பிரிந்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில், 11 பேர் காயமடைந்துள்ளனர். இந்த மோதலில் மிளகு ஸ்பிரே, கத்திகள் மற்றும் துப்பாக்கி ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக அருகிலிருந்து பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த 100 அதிகாரிகள் அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதுபற்றிய விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

Summary

11 injured in clash at gurdwara in Germany

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.