எத்தியோப்பியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் காமோ பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்த கனமழையால் அங்குள்ள காச்சோ பாபா, கம்பா மற்றும் போன்கே ஆகிய மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால், அங்குள்ள ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை ஒருவர் மட்டுமே நிலச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 50 பேர் பலியானதாகவும், 125 பேர் மாயமாகியுள்ளதாகவும் வியாழக்கிழமை (மார்ச் 12) உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடந்து, 3 மாவட்டங்களின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாயமானவர்களைத் தேடும் பணிகளில் நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Around 50 people have been reported killed in a landslide in Ethiopia.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









