அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது கடந்த பிப். 28 அன்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டதாக, ஈரான் அரசின் தியாகிகள் மற்றும் முன்னாள் வீரர்களின் விவகாரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தகவலானது, இதுவரை அடையாளம் காணப்பட்டு இறுதிச் சடங்கிற்குத் தயாரான உடல்களின் எண்ணிக்கை எனவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானில் மகளிர் பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Summary
1,046 people have been killed in Iran so far due to attacks by US and Israeli forces.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வங்கதேசத்தில் தொடரும் தட்டம்மை பரவல்! 499-ஐ எட்டிய உயிர்ப் பலிகள்!

வங்கதேசத்தில் தட்டம்மைக்கு மேலும் 12 குழந்தைகள் உயிரிழப்பு! பலி எண்ணிக்கை 451..!

காங்கோ குடியரசில் எபோலா தொற்று பரவல்

ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




