காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

திண்டுக்கல்லில் பெண்ணிடமிருந்து 5 பவுன் நகை பறிப்பு

திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல்லில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.   திண்

Updated On :20 செப்டம்பர் 2012, 12:39 am

திண்டுக்கல், மார்ச் 10: திண்டுக்கல்லில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடமிருந்து 5 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றதாக காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது.

  திண்டுக்கல் ஆர்.எம்.காலனி 80 அடி சாலையை அடுத்துள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்த சாக்கு வியாபாரி கிருஷ்ணன். இவரது மனைவி கீதா. சனிக்கிழமை குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த இளைஞர் இருவர் கீதா கழுத்தில் இருந்த 5 பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டனராம். இது குறித்து நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.