பிசான பருவ சாகுபடிக்கு கடனாநதி, ராமநதி அணைகள் திறப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ சாகுபடிக்காக கடனாநதி, ராமநதி அணைகள் மூலம் பாசனம் பெறும் 14,867 ஏக்கர் நிலங்களுக்கு வெள்ளிக்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதேபோல் கருப்பாநதி, அடவிநயினார் அணைகள் மூலம் பாசனம் நிலங்களுக்கும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பூ. செந்தூர்பாண்டியன் தெரிவித்தார்.










