ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான கட்டடம் சீல்வைப்பு

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஒன்று சேலம் கடைவீதியில் உள்ளது. இந்த இடத்தை திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மற்றும் கடைகளைக் கட்டினார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்துக்கு கோவில் நிர்வாகம் இன்று சீல் வைத்தது.

News image
Updated On :29 நவம்பர் 2012, 9:57 am

தங்கராஜா

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடம் ஒன்று சேலம் கடைவீதியில் உள்ளது. இந்த இடத்தை திமுக பிரமுகர் ஒருவர் ஆக்கிரமித்து ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் மற்றும் கடைகளைக் கட்டினார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலத்துக்கு கோவில் நிர்வாகம் இன்று சீல் வைத்தது.

இந்த இடம் கோவிலுக்குச் சொந்தமானது என்று கடந்த 22ம் தேதி நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அடுத்து, கடைகளை காலி செய்யச் சொல்லி அனைத்து கடைக்காரர்களுக்கும் அறநிலையத்துறை சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் இதனை யாரும் பொருட்படுத்தவில்லை.

இந்நிலையில்,  சேலம் அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் மங்கையர்க்கரசி, உதவி ஆணையர் பழனிக்குமார், ஏ.சி., ரவிசந்தர், தாசில்தார் சுரேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸார், அறநிலையத்துறை

அதிகாரிகள் ஆகியோர் அடங்கிய குழுவினர் சீல் வைக்கும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.