தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் கடல் சீற்றம் : விசைப்படகுகள் கரை திரும்பின

கடலூரில் இன்று கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் 250க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கரை திரும்பினர்.

News image
Updated On :2 அக்டோபர் 2012, 6:51 am

சீனிவாசன்

கடலூரில் இன்று கடல்சீற்றம் அதிகமாக இருந்ததால் 250க்கும் மேற்பட்ட விசைப் படகு மீனவர்கள் கரை திரும்பினர்.

கடலூரில் சுமார் 1000 விசைப்படகுகள் உள்ளன. அண்மையில் ஏற்பட்ட மின் தடை காரணமாக ஐஸ் உற்பத்தி பாதிப்பு மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக பாதிக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை.

இந்த நிலையில், 300 விசைப் படகுகள் மீன்பிடிக்க இன்று அதிகாலை கடலுக்குச் சென்றன. 6 மணியளவில் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், 250 விசைப் படகுகளில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிவிட்டனர். சுமார் 10 அடி உயரத்துக்கு கடல் அலை எழும்புவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகவலை தமிழ்நாடு மீனவர் பேரவைத் தலைவர் சுப்புராயன் தெரிவித்துள்ளார்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.