47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கீழ்வேளூர் அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை; பதற்றம்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அதிமுக இளைஞரணி ஒன்றிய நிர்வாகி சரவணக்குமார் (28) இன்று காலை கீழ்வேளூர் க

News image
Updated On :13 அக்டோபர் 2012, 8:57 am

சங்கர்

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அதிமுக இளைஞரணி ஒன்றிய நிர்வாகி சரவணக்குமார் (28) இன்று காலை கீழ்வேளூர் கடைவீதியில் நின்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டப்பட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவர் உயிரிழந்தார். இதை அடுத்து, கீழ்வேளூர் பகுதியில் சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவரது படுகொலையால் அதிர்ச்சி அடைந்த அதிமுகவினர் மற்றும் அவரது உறவினர்கள் மேற்கொண்ட இந்த சாலை மறியல் போராட்டங்களால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.