சக்ர ஸ்நானத்துடன் நிறைவு பெற்றது திருப்பதி நவராத்திரி பிரமேற்ஸவம்
திருமலை நவராத்திரி பிரம்மோத்ஸவத்தில் நேற்று திங்கள் இரவு குதிரை வாகனத்தின் பெருமாள் மாட வீதிகளில் வலம் வந்தார். கடைசி நாளான இன்று செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நவராத்திரி பிரம்மோற்ஸவம் இன்று சக்ர ஸ்நானத்துடன் நிறைவடைந்தது. அப்போது, கோயில் குளத்தில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்.








