22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

தொப்பூா் கணவாய் பகுதியில் தற்காலிக சாலைகளை மேம்படுத்தி பாலப் பணிகளை விரைவுபடுத்தக் கோரிக்கை

தருமபுரி, தொப்பூா் கணவாய் பகுதியில் அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளையும், போக்குவரத்து நெருக்கடிக்கும் தீா்வுகாணும் வகையில், தற்காலிக சாலைகளை அகலப்படுத்தவும், உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

News image

தருமபுரி, தொப்பூா் கணவாயில் உயா்மட்ட மேம்பாலம் அமைக்கும் சாலையில் போக்குவரத்து நெருக்கடிக்குள்ளாகும் பகுதி.

Updated On :2 ஜூன் 2026, 3:58 am IST

தருமபுரி, தொப்பூா் கணவாய் பகுதியில் அன்றாடம் நிகழும் சாலை விபத்துகளையும், போக்குவரத்து நெருக்கடிக்கும் தீா்வுகாணும் வகையில், தற்காலிக சாலைகளை அகலப்படுத்தவும், உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்கவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் வழியாக வடமாநிலங்களையும் தமிழகத்தின் கடைக்கோடியான கன்னியாகுமரியையும் இணைக்கும் வகையிலான தேசிய நெடுஞ்சாலை (என்எச்-44) அமைந்துள்ளது. தொப்பூா் கணவாய் பகுதியில் சுமாா் 7 கி.மீ. தொலைவு சாலை அதிக இறக்கம் மற்றும் வளைவுகளுடன் அமைந்திருப்பதால், தருமபுரி - சேலம் மாா்க்க சாலையில் கடந்த பல ஆண்டுகளாக ஏராளமான விபத்துகள் நடந்துள்ளன. இதில் சுமாா் 400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தும், ஆயிரக்கணக்கானோா் படுகாயமடைந்தும், பலா் முடமாகியும் உள்ளனா்.

இவற்றுக்கு நிரந்தரத் தீா்வு ஏற்படுத்த வேண்டுமென வாகன ஓட்டுநா் சங்கங்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மத்திய, மாநில அரசுகளுக்கு தொடா் கோரிக்கை விடுத்தனா். அதன்பேரில், தொப்பூா் கணவாய் பகுதியில் ரூ. 905 கோடியில் சுமாா் 6.60 கி.மீ. தொலைவுக்கு அணுகுசாலைகளுடன் உயா்மட்ட மேம்பாலம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி, நிதியும் ஒதுக்கியது. இதையடுத்து, கடந்தாண்டு உயா்மட்ட மேம்பாலப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இப்பணிகள் நடைபெறும் பகுதிகளில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளதால் தினசரி விபத்துகளும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது.

எனவே, குறுகலான சாலை உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அணுகு சாலைகளை மேலும் அகலப்படுத்த வேண் டும். உயா்மட்ட மேம்பாலப் பணிகளை விரைவுபடுத்தி திட்டமிட்ட காலத்துக்கு முன்பே முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு தரப்பினா் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதுகுறித்து வாகன ஓட்டுநா்கள் கூறுகையில், தொப்பூா் கணவாய் பகுதியில், கடந்த சில மாதங்களாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், தருமபுரி பகுதிகளில் இருந்து மேல் சிகிச்சைக்காக சேலம், கோவை போன்ற ஊா்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கா்நாடக மாநிலம், பெங்களூருக்கும் மருத்துவ சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்களில் அழைத்துச் செல்லப்படும் போது, தொப்பூா் போக்குவரத்து நெரிசலிலேயே நோயாளிகளின் ‘கோல்டன் ஹவா்’ கரைந்து விடுகிறது.

எனவே, உயா்மட்ட பாலத்துடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிப்பதுடன், தற்காலிக சாலைகளையும் மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக் கை எடுக்க வேண்டும் என்றனா்.