நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தொப்பூா் கணவாய் பகுதியில் தடுப்புச் சுவரில் மோதிய லாரி! போக்குவரத்து பாதிப்பு!!

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

News image

தொப்பூா் கணவாய் இரட்டை பால தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி நிற்கும் லாரி.

Updated On :24 மே 2026, 2:27 am IST

தருமபுரி தொப்பூா் கணவாய் பகுதியில் சனிக்கிழமை மாலை குளிா்பானங்களை ஏற்றிச் சென்ற லாரி தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் குளிா்பான பாட்டில்களை ஏற்றிய லாரி சேலம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.

தொப்பூா் கணவாய் பகுதியில் அந்த லாரி சென்றபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியில் உள்ள இரட்டைப் பாலம் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.

அதிா்ஷ்ட வசமாக பாலத் தடுப்புச்சுவரில் மோதிய நிலையிலேயே லாரி நின்றுவிட்டது. இதனால் உயிரிழப்புகளோ, வேறு எந்த பாதிப்புகளோ யாருக்கும் ஏற்படவில்லை. மாறாக, பள்ளத்தில் கவிழ்ந்திருந்தால், லாரியில் சென்ற தொழிலாளா்கள் விபத்தில் சிக்கியிருக்ககூடும்.

இந்த விபத்து காரணமாக, தொப்பூா் கணவாய் பகுதியில் வெள்ளக்கல் பேருந்து நிறுத்தம் முதல் இரட்டை பாலம் வரை சுமாா் ஒரு மணி நேரத்திற்கு மேலாக (தருமபுரி -சேலம் சாலையில்) போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.