விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆசிரியர்களுக்கு பரிசு வழங்கி கௌரவித்த ஏழை மாணவர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 05 : ஸ்ரீவில்லிபுத்தூர் நரையன்குளம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:13 am

ஸ்ரீவில்லிபுத்தூர், செப்., 05 : ஸ்ரீவில்லிபுத்தூர் நரையன்குளம் - ஒத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர் தினத்தையொட்டி, தங்களுக்கு கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பரிசு வழங்கி ஏழை மாணவ, மாணவிகள் கௌரவித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்ட ஏழை மாணவ, மாணவியர் மட்டும் பயிலும் இந்த பள்ளியில், மாணவ, மாணவிகள் பெற்றோர் தங்களுக்குக் கொடுக்கும் சிறிய அளவிலான பணத்தை சேமித்து வைத்து அதன் மூலம் ஆசிரியர்களுக்கு பரிசு பொருள் வாங்கியிருப்பது குறித்து விழாவில் கலந்து கொண்ட உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் ஜெயராஜ் கந்தசாமி பேசுகையில், மாணவ, மாணவிகள் அளித்த பரிசுகளைப் பெற்ற ஆசிரியர்களுக்கு, இன்று தேசிய விருது கிடைத்த அளவுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் அளித்த அறிவைப் பெற்று நாம் எதிர்காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் அதனால் ஆசிரியர்களுக்கு எந்த பலனும் இல்லை. அவர்கள் ஏணி போல நம்மை முன்னேற்றுகிறார்கள். எனவே, ஆசிரியர்களை நாம் எப்போதும் போற்றி மதிக்க வேண்டும் என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.