தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி வினாத்தாள் விவகாரம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகளைத் தேடுவதை அறிந்த ஆனந்த ராவ், ஒரிசா மாநிலத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு, ஆந்திராவில் விசாகப்பட்டினத்துக்கு வந்துள்ளார். அங்கே சில நாட்களாக, செல்போனுக்கு பல்வேறு சிம் கார்டுகளை வாங்கிக் கொண்டு, சிம் கார்டுகளை மாற்றிக்கொண்டே பயன்படுத்தியுள்ளார். இந்நிலையில், அவரை விசாகப்பட்டினம் போலீஸார் கைது செய்தனர். தகவல் அறிந்து சென்ற தமிழக போலீஸார், விசாகப் பட்டினம் மெட்ரோ நீதிமன்றத்தில் டிரான்சிட் வாரண்ட் பெற்று, ஆனந்த ராவை அழைத்து வந்தனர். பின்னர் இன்று மாலை ஈரோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.