கோவை அருகே ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம், எம்.ஜி.ஆர் நகரில் ஜெயலலிதா பேரவை அலுவலகம் செயல்பட்டு வந்தது. அது தென்னங்கீற்றுகளால் வேயப்பட்டது.
இங்கு இன்று புதன்கிழமை காலை மே தினக்கொண்டாட்டம் நடைபெற இருந்தது. இந் நிலையில் நேற்று இரவு அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஜெயலலிதா பேரவை அலுவலகத்துக்கு தீ வைத்து விட்டுத் தப்பி ஓடினர். இதில் அலுவலகம் முழுவதும் எரிந்து சாம்பலானது.
புதன்கிழமை காலை இதன் விவரம் தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் தொண்டாமுத்தூர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் தீ வைத்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹலோகிராமில் விஜய் உருவம்... தவெக வேட்பாளர் நூதன பிரசாரம்!

100% வாக்குப் பதிவு: கோவையில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஆய்வுக் கூட்டம்

கேவிஎன் நிறுவனத்திற்காக மீண்டும் நடிக்கும் விஜய்?

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

