மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசுநீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு வெள்ளை அறிக்கை இன்று மாலை வெளியீடு!கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

புதுச்சேரி, காரைக்காலில் நாளை பந்த்: பா.ம.க. அறிவிப்பு

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுவிக்கக்கோரியும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை

Updated On :2 மே 2013, 12:08 pm IST

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவரை விடுவிக்கக்கோரியும், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை (மே 3) பந்த் நடைபெறும் என்று பா.ம.க., வன்னியர் சங்கம் அறிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கவுண்டம்பாளையம் வன்னியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு வன்னியர் சங்க மாநில ஆலோசகர் கே.ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

பா.ம.க., வன்னியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் வேணுகோபால், ஞானசேகரன், தங்க.அறிவழகன், ஜெயபாலன், வடிவேலு, ரவி, கணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையிலும், அவரை விடுவிக்கக் கோரியும் வரும் வெள்ளிக்கிழமை (மே 3) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை புதுச்சேரி, காரைக்காலில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.