நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கபில் சிபலுக்கு சட்டத் துறை; ஜோஷிக்கு ரயில்வே

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

News image
Updated On :11 மே 2013, 2:48 pm IST

தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் சட்டத் துறையையும், சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சி.பி. ஜோஷி ரயில்வே அமைச்சகத்தையும் கூடுதலாக பொறுப்பேற்க உள்ளனர்.

சட்டத் துறை அமைச்சராக இருந்த அஸ்வனி குமாரும், ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலும் பதவி விலகியதை அடுத்து, இவ்விரு துறைகளையும், கபில் சிபலும், ஜோஷியும் கூடுதல் பொறுப்பாக ஏற்று கவனிக்க உள்ளனர்.

மத்திய அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த மாற்றம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் முகுல் ராய், ரயில்வே அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகியதை அடுத்து, ஜோஷி தான் ரயில்வே அமைச்சகப் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.