தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வெண்ணாற்று நீரேற்று நிலையத்தில் குளிக்க சென்ற 2 சிறுவர்கள் பலி

பெரம்பலூர் மாவட்டம் ஆவணங்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜராஜன்(11). பள்ளி விடுமுறை என்பதால் உள்ள தஞ்சை உள்ள உறவினர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு ராஜராஜன் வந்தான்.

Updated On :11 மே 2013, 9:12 am

பெரம்பலூர் மாவட்டம் ஆவணங்குடியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவரது மகன் ராஜராஜன்(11). பள்ளி விடுமுறை என்பதால் உள்ள தஞ்சை உள்ள உறவினர் ராஜேந்திரன் என்பவரது வீட்டிற்கு ராஜராஜன் வந்தான். நேற்று ராஜராஜன், ராஜேந்திரன் மகன் அரவிந்தன்(7) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 4 சிறுவர்களுடன் சேர்ந்து பள்ளியக்ரஹாரம் அருகே உள்ள வெண்ணாற்று நீரேற்று நிலையத்திற்கு குளிக்க சென்றான்.

நீரேற்று நிலையம் அருகில் தேங்கியிருந்த 20 அடி ஆழ நீரில் இவர்கள் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக ராஜராஜனும், அரவிந்தனும் தத்தளித்தனர். இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் அவர்களை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் அதற்குள் சிறுவர்கள் இருவரும் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கோட்ட அலுவலர் ரவிச்சந்திரன் உத்தரவின்பேரில், நிலைய அலுவலர் சுந்தர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து நீரில் அடியில் சேற்றில் சிக்கிக்கொண்டிருந்த 2 சிறுவர்களையும் பிணமாக மீட்டனர்.இதுகுறித்து தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.