தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

இன்று முதல் சிலிண்டர்களுக்கு நேரடி மானிய முறை துவக்கம்

எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.

News image
Updated On :1 ஜூன் 2013, 1:12 pm IST

எல்பிஜி சிலிண்டர்களுக்கு நேரடி மானியம் அளிக்கும் திட்டம் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் இன்று துவக்கப்படுகிறது.

எல்பிஜி சிலிண்டர்களுக்கு மத்திய அரசு வழங்கும் மானியத் தொகையான ரூ.435ஐ, நேரடியாக நுகர்வோரின் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த திட்டம் 20 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட இருந்தது. ஆனால், கர்நாடகாவின் மைசூர், இமாச்சலின் மண்டி மாவட்டங்களில் சட்டப்பேரவை தேர்தல் காரணமாக நிறுத்திவைக்கப்பட்டு, 18 மாவட்டங்களில் மட்டும்  செயல்படுத்தப்பட உள்ளது.

இனிமேல், புதுச்சேரி, வடக்கு கோவா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் உள்ள எல்பிஜி நுகர்வோர், ஒவ்வொரு முறை சிலிண்டருக்கு பதிவு செய்யும் போதும், அவர்களது வங்கிக் கணக்கில், மத்திய அரசின் மானியத் தொகையான ரூ.435 வரவு வைக்கப்படும். இதனுடன், நுகர்வோர் அளிக்க வேண்டிய ரூ.410ஐயும் சேர்த்து ரூ.845 ரூபாய் கொடுத்து வீட்டுக்கு வரும் சிலிண்டரை நுகர்வோர் வாங்க வேண்டும்.

இந்த திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பொறுத்து, நாடு முழுவதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.