தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

காவிரி நதிநீர் பங்கீடு : ஜூன் மாதத்துக்கு 10 டிஎம்சி தண்ணீர் கோரும் தமிழகம்

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

News image
Updated On :1 ஜூன் 2013, 1:00 pm IST

காவிரி நதிநீர் பங்கீடு குறித்து முடிவெடுக்க புது தில்லியில் இன்று கூடிய தற்காலிக காவிரி கண்காணிப்புக் குழுவில் தமிழக, கர்நாடக அதிகாரிகள் தங்களது வாதங்களை முன் வைத்தனர்.

கூட்டத்தில் பங்கேற்ற தமிழக தலைமைச் செயலாளர், தமிழகத்துக்கு காவிரியில் இருந்து ஜூன் மாதத் தேவைக்கு 10 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆனால் இதற்கு மறுப்புத் தெரிவித்த கர்நாடக தலைமைச் செயலாளர், கர்நாடகத்தில் இன்னும் பருவ மழை துவங்கவேயில்லை. அதில்லாமல், கர்நாடகத்தில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு இது குறித்து கலந்தாலோசனை நடத்தி, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும். இன்னும் புதிய அரசு பணிகளைத் துவங்கவில்லை. எனவே காவிரியில் தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட தற்காலிகக் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத் துறை செயலாளருமான எஸ்.கே. சர்க்கார், எடுக்க வேண்டிய முடிவு குறித்து ஆலோசித்து வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.