திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியில் புதிதாகக் கோயில் கட்டுவது என்று திருப்பதி தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.இந்தப் புதிய கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை வரும் ஜூன் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கன்னியாகுமரியில் நடைபெறவுள்ளது.
இது குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானத் தலைவர் கே.ஆனந்தகுமார் ரெட்டி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 2010-ம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் பிரமாண்ட முறையில் ஒரு திருக்கல்யாண நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சிக்குத் திரண்ட பக்தர்களின் கூட்டத்தைக் கண்ட தேவஸ்தான நிர்வாகிகள், ஸ்ரீவெங்கடேச பெருமாளுக்கு கன்னியாகுமரியிலேயே ஒரு திருக்கோயில் கட்டுவது என்று தீர்மானித்தனர்.
அதன்படி தற்போது கோயில் கட்டும் பணி தொடங்கவுள்ளது. இந்த புதிய கோயில் கட்டுவதற்காக விவேகானந்தா கேந்திரம் ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இந்தத் திருக்கோயில் கட்டும் பணிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ.22 கோடியே 50 லட்சம் ஒதுக்கியுள்ளது. கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை வரும் ஜூன் 4-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6.30 மணிக்கு நடைபெறும். கோயில் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளில் நிறைவு பெறும்.
திருப்பதி கோயிலில் நடைபெறும் அனைத்து பூஜைகளும் கன்னியாகுமரியில் அமையவுள்ள பெருமாள் கோயிலிலும் ஆகம விதிகளின்படி நடைபெறும். மேலும் இந்தக் கோயிலில் வேத பாடசாலை, கோசாலை மற்றும் திருமண மண்டபம் போன்றவையும் நிறுவப்படும். பக்தர்களுக்காக கன்னியாகுமரியிலேயே பிரசாதம் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டு பக்தர்களின் நீண்ட நாளைய கோரிக்கையை ஏற்று தற்போது கன்னியாகுமரியில் இந்த புதிய திருக்கோயில் அமையவுள்ளது. ஸ்ரீவெங்கடேச பெருமாள், ஸ்ரீதேவி தாயார் மற்றும் பூதேவி தாயார் சுவாமிகளுடன் அமையவுள்ள இந்தக் கோயிலானது கன்னியாகுமரியின் கலியுக வைகுண்டம் என போற்றப்படும் என்றார் ஆனந்தகுமார் ரெட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?

விவாகரத்து முடிவில் சர்வானந்த்?

பாஜகவின் இன்னொரு சங்பரிவாராக மாறி வருகிறது அதிமுக: தொல்.திருமாவளவன்

சமஸ்கிருதம் வெறும் மொழி மட்டுமல்ல.. தேசத்தின் உயிர்நாடி: மோகன் பாகவத்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

