ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நிகழ்ந்த கார் குண்டு தாக்குதல்களில் 65 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று மாலை நோன்பினை நிறைவு செய்ய மக்கள் கடைவீதிகளை நோக்கிச் சென்ற போது புது பாக்தாத், டாப்ஜி, ஷீர்தா அல்-ராபியா, ஜப்ரானியா, அல்-மதைன் ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே கார் குண்டு தாக்குதல் நடந்தது.இந்த தாக்குதல்களில் 65 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







