அரசியல் கட்சிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்ட (ஆர்டிஐ) திருத்த மசோதா மக்களவையில் நாளை(திங்கள்கிழமை) தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த மசோதாவை மத்திய பணியாளர், குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய இணையமைச்சர் வி.நாரயணசாமி தாக்கல் செய்ய உள்ளார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்துக்குள் காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், கம்யூனிஸ்ட் (இந்திய மற்றும் மார்க்சிஸ்ட்) மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய 6 கட்சிகளை கொண்டு வர மத்திய தவல்கள் ஆணையம் (சிஐசி) உத்தரவிட்டது.இக்கட்சியினர் மத்திய அரசிடமிருந்து மறைமுகமான முறையில் நிதி பெறுவதால், அக்கட்சிகள் பொது தகவல் அலுவலரை நியமிக்க வேண்டும். எனவே, அக்கட்சிகள் ஆர்டிஐ சட்டத்துக்குள் வரும் என்று தகவல் ஆணையம் கடந்த ஜூன் மாதம் 3-ம் தேதி உத்தரவிட்டது.
இதற்கு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஆர்டிஐ-யை கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியே இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இறுதியில், ஆர்டிஐயில் திருத்தம் கொண்டு வர மத்திய பணியாளர் துறை முடிவு செய்தது. பின்னர், சட்ட அமைச்சகம் மற்றும் பிற அரசியல் கட்சியினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.இதைத் தொடர்ந்து ஆர்டிஐ சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 1-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி குழந்தை பாலியல் கொலை! விசாரணையில் திடீர் திருப்பம்

ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடுத்திட வேண்டும்: தங்கம் தென்னரசு

கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி!

கருப்புக்காக ரூ. 1 கோடி வழங்க முன்வந்த இயக்குநர் ஹெச். வினோத்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


