மதுரை மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ஆனந்தன் கோவைக்கு திடீரென கடந்தவாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் கடந்த ஆண்டு கண்காணிப்பாளராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையிலும், கைதிகளுக்கு வெளியிலிருந்து கஞ்சாப் பொட்டலம் தொடர்ந்து வீசப்பட்டது. மேலும், கைதிகளுக்கு செல்போன் பேசவும், தடைசெய்யப்பட்ட பொருள்கள் கிடைக்கவும் சிறை அலுவலர்கள் சிலரே உடைந்தையாக இருந்ததாக புகார்கள் எழுந்தன. அதன்படி சிலரை இடமாற்றிட கண்காணிப்பாளர் உயரதிகாரிகளுக்குப் பரிந்துரைத்தார்.
மதுரை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களா கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதலும் ஏற்பட்டது. இதில் காயமைடந்து சிகிச்சைக்கும் அவ்வப்போது கைதிகள் அனுமதிக்கப்பட்டுவந்தனர். கைதிகளுக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சைகள் சரியான முறையில் கிடைப்பதில்லை என்றும் புகார் எழுந்தது.
இத்தகைய சூழலில் கடந்த வாரம் மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆனந்தன் கோவை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் வேலூர் மத்திய சிறையில் கண்காணிப்பாளராக இருந்த ரா.அறிவுடைநம்பி மதுரை மத்திய சிறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவாடானையில் ஏப்.15-இல் 2-ஆம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம்

வளா்ந்த நாடுகள், ஏழை நாடுகள் இடையே இடைவெளி அதிகரிப்பு: ஐ.நா. அறிக்கை

திருவாடானை பேரவைத் தொகுதிக்கு கூடுதலாக 453 வாக்குப்பதிவு இயந்திரங்கள்!

காஞ்சிபுரத்தில் 8 சுயேச்சைகள் உள்பட 15 போ் போட்டி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

