5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம் மின்வெட்டை நீக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜி ஜூன் 17-ல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
/

மதுக்கடையை அகற்றக் கோரி மறியல்: வைத்திலிங்கம் உள்பட 200 பேர் கைது

கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸார்

Updated On :22 ஆகஸ்ட் 2013, 6:15 pm IST

கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து காங்கிரஸார் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி, கருவடிக்குப்பம், சாமிபிள்ளைத் தோட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை பகுதியி் தனியார் மதுபானக் கடை அமைக்க அரசு அனுமதி அளித்தது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த பேரவைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் அப்பகுதியி்ல் மதுக்கடை அமைக்க எதிர்ப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை அந்த இடத்தில் மதுக்கடை திறக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற அப்பகுதி பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சிலை அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் போராட்டத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார்.

மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தினர். மறியலைக் கைவிட போராட்டக்காரர்கள் மறுக்கவே, அவர்களைக் கைது செய்தனர். எம்.எல்.ஏ. வைத்திலிங்கம், காங்கிரல் மாநில செயலாளர் முனுசாமி, இளைஞர் காங்கிரஸ் தொகுதி தலைவர் அன்பழகன் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.