ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

ரெளடி குண்டர் சட்டத்தில் கைது

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

Updated On :22 ஆகஸ்ட் 2013, 12:46 pm

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த ரெளடி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே உள்ள மங்களபுரம் குள்ளன் தெருவில் வசிப்பவர் மு. மகன் சதீஷ் (22). இவர் மீது அம்பத்தூர், கொரட்டூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையங்களில் அடிதடி, தங்கச் சங்கிலி பறிப்பு, கொலை மிரட்டல், கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கைது செய்ய அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற சென்னை பெருநகரக் காவல் துறை ஆணையர் ஜார்ஜ், அச் சட்டத்தின் கீழ் சதீஷை கைது செய்து, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சதீஷை போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.