சென்னையிலிருந்து வடமாநிலம் செல்லும் 6 விரைவு ரயில்கள் வழித்தடம் மாற்றம்மக்களவைத் தொகுதிகளை 50% அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனைஎம்பிபிஎஸ், பிடிஎஸ் இணைய விண்ணப்பப் பதிவு தொடக்கம்!தமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு!
/

ராகுல் காந்தியின் தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம்: ஷிண்டே

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை

News image
Updated On :11 செப்டம்பர் 2013, 6:24 pm IST

யாரை வேண்டுமானாலும் பிரதமர் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி அறிவிக்கட்டும், ஆனால் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை துணை தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

2014 -ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்தர் மோடியை நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டு வருகிறது.இதற்காக பாஜக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நாளை தில்லியில் கூடி முடிவு எடுக்கவுள்ளது. இந்நிலையில் நரேந்தர் மோடியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வரும் நாடாளுமன்ற தேர்தலில் சிறிய மற்றும் பெரிய கட்சிகள் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரதமர் வேட்பாளராக ராமு, ஷாமு என்று யாரை வேண்டுமானலும்  அறிவிக்கலாம். ஆனால், காங்கிரஸ் கட்சியைப் பொருத்த வரை துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது என்று சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.