அருப்புக்கோட்டையில் வீட்டிற்கு முன் மது குடித்தவர்களை தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கி மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
அருப்புக்கோட்டை கீரைப்பட்டி தெருவைச் சேர்ந்தவர் சந்திரன்(35). இவரது வீட்டிற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் உள்ளிட்ட அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத 4 பேர் வரையில் மது குடித்துக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக சந்திரன் மனைவி என் வீட்டிற்கு முன்பு உட்கார்ந்து மது குடிக்கக் கூடாது என தட்டிக் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் 4 பேரும் கண்டபடி பேசியுள்ளனர். அதோடு, அவரை தாக்கி மூக்குடைத்ததில் படுகாயம் அடைந்தார். இது குறித்து அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் சந்திரன் புகார் செய்தார். உடனே போலீஸார் பெண்ணின் மூக்கினை உடைத்த இளைஞர்கள் 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். உடனே மூக்கில் காயம் அடைந்த பெண்ணுக்கு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்ற பெண் கைது

நாளை பிரசாரம் நிறைவு: வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

முதல்முறையாக ஆழ்கடலில் மீன்பிடிப்புக்கு சென்று திரும்பிய படகுகள்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

