அகஸ்தியர் கோவில் பங்குனித் திருவிழா: கல்லிடைக்குறிச்சியில் பக்தர்கள் அங்க பிரதட்சனம்
கல்லிடைக்குறிச்சி அகஸ்தியர் கோவில் பங்குனி 7 ம் திருவிழாவையொட்டி வியாழக்கிழமை பக்தர்கள் பால்குடம், தீர்த்தக்குடம் எடுத்தனர். தெட்சணாமூர்த்தி, பொதிகாசலம் கோஷங்கள் முழங்க பக்தர்கள் அங்கபிரதட்சனம், கும்பிடுநமஸ்காரம் செய்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.










