இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

வி.கே. புரத்தில் மின்சாரம் தாக்கி வடமாநில இளைஞர் சாவு

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் திங்கள்கிழமை இரவு வடமாநிலத்தை சேர்ந்த ராட்டின ஆபரேட்டர் இறந்தார்.

News image
Updated On :16 ஏப்ரல் 2013, 5:10 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் மின்சாரம் தாக்கியதில் திங்கள்கிழமை இரவு வடமாநிலத்தை சேர்ந்த ராட்டின ஆபரேட்டர் இறந்தார்.
சித்திரை விசுத் திருவிழாவையொட்டி பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் மின்சார ராட்டினம் போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் பிரதான சாலையில் வயல் வெளியில் மின்சாரம் ராட்டினம் அமைக்கப்பட்டிருந்தது.
இந்த ராட்டினத்தில் உத்தரபிரதேசம் மாநிலம் இன்னிங் சவுரா பைசா பாத் ரோடு பகுதியை சேர்ந்த மன்சூர்ரகுமான் மகன் குஷோஅகமது (30) என்பவர் ஆபரேட்டராக பணி செய்து வந்தார். திங்கள்கிழமை இரவில் ராட்டினம் இயங்கி கொண்டிருந்தது. அப்போது திடீரென மின்சாரம் தாக்கியதில் ராட்டினத்தை
இயக்கி கொண்டிருந்த குஷோஅகமது உடல் கருகி சம்பவ இடத்திலே இறந்தார்.
தகவலறிந்த விக்கிரமசி்ங்கபுரம் போலீஸார் குஷோஅகமது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.