தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சீர்காழி அருகே காவல் நிலைய வளாகத்தில் 2 பேர் வெட்டிக் கொலை

சீர்காழிஅருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2013, 7:52 am

சங்கர்

சீர்காழிஅருகே பூம்புகார் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே இருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலைய வளாகத்துள் ரவி, ராஜேந்திரன் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேலையூரில் கொலை செய்யப்பட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் முத்து ராஜேந்திரன் என்பவரின் கொலை வழக்கில் கைதாகி தற்போது பிணையில் வெளிவந்துள்ளனர். பூம்புகார் காவல் நிலையத்தில் இருவரும் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு திரும்பும்போது, ஒரு மர்ம கும்பல் திடீரென அங்கே நுழைந்து காவல் நிலைய வளாகத்திலேயே அரிவாளால் வெட்டி ரவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது. 

அதற்கு சற்று நேரம் முன்பாக கையெழுத்து போட்டுவிட்டு வெளியே சென்ற ராஜேந்திரன், காவல் நிலையத்திலிருந்து 100 மீட்டர் தொலைவில் சென்றிருந்தபோது, அவரையும் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்தது. இருவர் கொலை தொடர்பாக தகவல் அறிந்த நாகை மாவட்ட எஸ்பி தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  இதற்கிடையே சடலங்களை  அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.