இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

டிராக்டரில் இருந்து விழுந்த சிறுவன் சாவு

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் விளை நிலத்தில் பொழி உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

News image
Updated On :29 ஏப்ரல் 2013, 4:48 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியில் விளை நிலத்தில் பொழி உழவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் இருந்து தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தான்.

ஆழ்வார்குறிச்சி வள்ளுவர்நகரை சேர்ந்த அருணா மகன் அஜய் (6). சிறுவனின் தாய், தந்தை இருவரும் இறந்து விட்டனர். அங்குள்ள பள்ளியில் அஜய் 1 ம் வகுப்பு படித்து வந்தார். அஜய் தாத்தா பராமரிப்பில் இருந்து வந்தார்.

நேற்று வள்ளுவர் நகரை அடுத்துள்ள விளை நிலங்களில் நடுகைக்காக

விவசாயிகள் டிராக்டர் மூலம் பொழி உழவு பணியினை மேற்கொண்டனர்.

அப்போது உழவு பணியில் ஈடுபடுத்தப்பட்ட டிராக்டரில் ஒன்றில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஜய் தவறி விழுந்ததில் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலே இறந்தார். இது குறித்து

ஆழ்வார்குறிச்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.