விழுப்புரம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 பேர் படுகாயம்

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
Updated on
1 min read

விழுப்புரம் அருகே சிந்தாமணியில் அரசுப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மதுரையில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, விழுப்புரம் சிந்தாமணி அருகே வந்தபோது, பஸ்ஸை முந்திச் செல்ல வேகமாக வந்த லாரிக்கு வழிவிடும்போது சாலையோரப் பள்ளத்தில் சரிந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில்  ஓட்டுநர் சுருளிவேல், நடத்துனர் சங்கர்ராமன், பயணிகள் கரூர் ராதிகா, மதுரையைச் சேர்ந்த கதிர்வேல், பாண்டியராஜன் உள்பட 10 பேர் பலத்த காயம் அடைந்தனர். மேலும் 29 பேருக்கு லேசான காயம்  ஏற்பட்டது. இந்தப் பேருந்தில் 39 பேர் பயணித்தனர்.

இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் விழுப்புரம் அருகே முண்டியம்பாக்கம்  அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com