மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குடித்து விட்டு அம்மாவை அடிக்கும் அப்பா மீது நடவடிக்கை எடுங்க: ஆட்சியரிடம் சிறுமி மனு

எங்க அம்மாவை அப்பா எப்போதும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். அவருக்கு பாதுகாப்பு இல்லை. எங்க அப்பா மீது ஏதாவது நடவடிக்கை எடுங்க- இப்படி 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாவட்ட ஆட்சியரிடம்...

Updated On :29 ஏப்ரல் 2013, 9:02 am

எங்க அம்மாவை அப்பா எப்போதும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார். அவருக்கு பாதுகாப்பு இல்லை. எங்க அப்பா மீது ஏதாவது நடவடிக்கை எடுங்க- இப்படி 7ம் வகுப்பு படிக்கும் சிறுமி மாவட்ட ஆட்சியரிடம் கடிதம் எழுதி, மனுவாக அளித்துள்ளார்.

சேலத்தை அடுத்த குப்பனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு. இவர் டீக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி மணிமேகலை. இவர்களுக்கு பௌமிகா(12) என்ற 7ம் வகுப்பு படிக்கும் மகள், மற்றும் 11 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

இன்று  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, பௌமிகா மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு ஒன்றினை அளித்தார். அதில்,

"குடிப் பழக்கம் உள்ள என் அப்பா, அடிக்கடி வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார். அவர் அம்மாவை அதிகம் அடிக்கிறார். போன புதன்கிழமை எல்லாரையும் அடித்து விட்டு இரும்புக் கம்பியால் என் அம்மாவை அடித்து, வீட்டுக்குள் போட்டு பூட்டி விட்டுச் சென்றார். பக்கத்தில் உள்ளவர்கள் எங்கள் அம்மாவை மீட்டு சேலம் மருத்துவமனையில் சேர்த்தனர். எங்க அம்மாவுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே என் அப்பா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்டு வாசித்துப் பார்த்த ஆட்சியர் மகரபூஷணம், உடனடியாக இந்த மனுவின் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார், மேலும், காவல் கண்காணிப்பாளரிடமும் இது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.