திருச்சி வந்த பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள் வரவேற்பு

வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
திருச்சி வந்த பிரதமருக்கு தமிழக அமைச்சர்கள் வரவேற்பு
Updated on
1 min read

வெள்ளிக்கிழமை காலை திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக அமைச்சர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

திருச்சியை அடுத்த திருமயத்தில் உள்ள பிஎச்இஎல் நிறுவனத்தின் புதிய ஆலையைத் துவக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங் இன்று முற்பகல் 11.05க்கு சிறப்பு விமானத்தில், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அவருக்கு தமிழக அரசின் சார்பில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செலவம், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத் துறை அமைச்சர் டி.பிபுனாச்சி, மக்களவை உறுப்பினர் பா. குமார், திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ  முரளி ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

தமிழக அரசின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட பிரதமர், 11.10க்கு, திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருமயம் புறப்பட்டுச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com