கல்லணையிலிருந்து 48வது மயிலில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் வலது கரையில் தஞ்சை மாவட்டத்தின் பாபநாசம் அருகே வாழ்க்கை என்ற இடத்தில் உடைப்பு ஏற்பட்டது. மேலும் திருச்சி, கடலூர், தஞ்சை மாவட்டங்கள் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டது. எனவே 2005 ஆண்டு நடைபெற்ற தவறு மீண்டும் ஏற்படாமல் இருக்க தமிழகஅரசு முன்னேற்பாடாக மேட்டூருக்கு வரும் நீர்வரத்தினை பாதி நீரை கல்லணைக்கு அனுப்ப வேண்டும். கல்லணையிலிருந்து வறண்டு கிடக்கும் காவிரி டெல்டா பகுதிகளுக்கு நீர் திறந்துவிட்டு ஏரிகள் மற்றும் குளங்களை நிரப்பிக் கொள்ளலாம். கொள்ளிடம் மற்றும் காவிரியில் திடீர் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கலாம் என கே.வி.கண்ணன்பிள்ளை தெரிவித்தார்.