மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கடலில் வீணாக கலக்கும் நீர்: விவசாயிகள் வேதனை

கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியது. இதனால் மேட்டூருக்கு கூடுதலாக நீர்வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே மேட்டூரில் நீர்மட்டம் 80

News image
Updated On :7 ஆகஸ்ட் 2013, 11:21 am

G.Sundararaj

கீழணையிலிருந்து புதன்கிழமை கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட சுமார் 94 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் சென்று கலப்பதால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகியுள்ளனர்.

கர்நாடகாவில் அதிகளவு மழை பெய்து அனைத்து அணைகளும் நிரம்பியது. இதனால் மேட்டூருக்கு கூடுதலாக நீர்வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரியும். எனவே மேட்டூரில் நீர்மட்டம் 80 அடி இருக்கும் போதே, கடந்த 15 தினங்களுக்கு முன்பே நீரை திறந்து இருந்தால், காவிரி டெல்டா கடை, மடை பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களை வரை நீர் வந்திருக்கும். ஏரி மற்றும் ஆறு, வாய்க்கால்கள், குளங்கள் நிரம்பியிருக்கும். ஆனால் தற்போது மேட்டூர் நிரம்பிய பின்னர் நீர் திறக்கப்பட்டு சுமார் 94 ஆயிரம் கனஅடி நீர் வீனாக கடலில் சென்று கலக்கிறது. இதற்கு முழுக்காரணம் அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்.

முன்கூட்டியே மேட்டூரிலிருந்து நீரை திறந்திருந்தால் வீணாக கடலில் நீர் செல்வதை தடுத்திருக்கலாம். மேலும் அரசும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நீரை தேக்கி வைக்க திட்டங்களை செயல்படுத்தாததுதான் காரணம். கடலூர் மாவட்டத்தில் உள்ள சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படும் மிகப்பெரிய நீராதாரமான வீராணம்ஏரி கடந்த 4 மாதங்களாக வறண்டு கிடக்கிறது. ஆனால் இன்று கீழணையிலிருந்து கொள்ளிடத்தில் சுமார் 94 கனஅடி நீர் திறக்கப்பட்டு வீணாக கடலில் சென்று கலப்பது மிகவும் வேதனையளிக்கிறது என கே.வி.இளங்கீரன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.