2011 நவம்பர் மாதம் கடலூர் மாவட்டத்தை தானே புயல் தாக்கிய போது கரும்பு, சவுக்கு, தென்னை உள்ளிட்ட இதர பயிர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது. கரும்புக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் பேரூர் கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அப்போதை மாவட்ட ஆட்சியர் ராஜேந்திரரத்னூ, கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் முயற்சியால் கரும்புக்கு பயிர் காப்பீடு தொகை கிடைத்தது. கரும்பு விவசாயிகளுக்கு கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக ரூ.183,92,744 ரூபாயும், தேசிய வங்கிகள் மூலமாக சுமார் 5 கோடிக்கு காப்பீடுத்தொகை கிடைத்துள்ளது.